Total Pageviews

Monday, March 3, 2014

முன்னுரை !!

திருப்புகழ் விளக்கம்

---அருணகிரிநாதர் அருளியவை ---
          உள்ளார்ந்த மறைபொருள்கள் 

முருகன் என்றால் அசுரர்களை அழித்து தேவர்களை , பக்தர்களை காக்கிறவர் என்பது தமிழ் மறை !!

முருகு என்றால் மாறி வருதல் என்பது பொருள் !
விண்ணில் தேவர்கள் அசுரர்களால் அடக்கி ஒடுக்க பட்டு மண்ணிலும் மனிதர்கள் அசுர மாயங்களால் பீடிக்க படும்போது அதை விடுவிக்க தேவதூதன் --வாணவர் என்ற நிலையிலிருந்து மனிதனாக மாறி வருகிற கடவுளின் பிரதிநிதி --குமாரன் என்பது !
அந்த குமாரன் ஞானத்தை ஆயுதமாக கொண்டவர் ! சூரணனின் பல வகையான மாயைகளை அழித்தவர் ! மனிதர்களுக்கு சற்குரு !
குரு என்றால் மனிதனுக்கும் கடவுளுக்கும் பாலமானவர் ! அல்லது வழி காட்டி !
நமக்கு ஒன்றை கற்றுத்தந்தவர்கள் எல்லோரும் உபகுரு !
சற்குருவோ எல்லா அறிவிற்கும் ஞானத்திற்கும் ஊற்றுகண்ணாக இருந்து கடவுளை காட்டி கொடுக்கிறவர் !
அர்ணகிரி நாதர் அவரை அநுபூதி நிலையில் உணர்ந்து பாடியவை ஞான மறை பொதிந்த பக்தி பாமாலையாகும் ! அவைகளின் பொருளை உணர்ந்து அனுபவித்தால் அனுபூதியடையலாம் ! அப்படி சிலவற்றை இங்கு தருகிறேன் !