Total Pageviews

Monday, March 3, 2014

திருப்புகழ் - 13

சந்ததம் பந்தத் ...... தொடராலே
     சஞ்சலந் துஞ்சித் ...... திரியாதே

கந்தனென் றென்றுற் ...... றுனைநாளும்
     கண்டுகொண் டன்புற் ...... றிடுவேனோ

தந்தியின் கொம்பைப் ...... புணர்வோனே
     சங்கரன் பங்கிற் ...... சிவைபாலா

செந்திலங் கண்டிக் ...... கதிர்வேலா
     தென்பரங் குன்றிற் ...... பெருமாளே.


அடுத்ததடுத்து பிறவியெடுத்து ஆத்துமா அடுக்குஅடுக்காக சேர்த்துக்கொண்ட கர்மத்தொடரால் இப்பிறவியில் உண்டாகிற விளைவுகளை சகிக்கமுடியாமல் என்ன செய்தேனோ என சஞ்சலத்தில் அலைகிற நான் அதிலிருந்து கடைதேற்றுகிற பற்றுகோடு -- ரட்சகர் நீர் என்பதை உணர்ந்து உம்மீது பக்தி கொண்டு கீழ்படியமட்டேனா ?

இசைந்து வாழும் பக்தர்களில் சிறந்த நற்குணமுள்ளோருடன் இரண்டற கலந்திருப்பவனே ! சரீரமாய் வாழ்கின்ற மனிதர்களை கடைதேற்ற மனிதனாகவே சரீரத்தில் வருகிற இறைதூதா ! சரீரத்தால்; அசுரர்களால் உண்டாகிற மகாமாயை கண்டித்து அழிக்கிற ஞானவேலையுடையவனே ! மனு குலத்தில் பரலோகத்திற்கான தகுதியுடையோரின் சற்குருனாதரே ! யுக புருஷனே !

சந்ததம் பந்தத் ...... தொடராலே
     சஞ்சலந் துஞ்சித் ...... திரியாதே


சந்ததம் என்பது அடுக்குஅடுக்காக அடுத்தடுத்து ஒரு விசயத்தை சிறப்புபடுத்தி பேசப்படும் வாக்கியங்களகும் ! இலக்கியத்திலும் மக்களின் மனங்களிலும் ஆழ்ந்து ஈர்ப்பை உண்டாக்க கூடியது ! அறிஞர் அண்ணாவால் மக்களின் மனதில் ஒரு பெரும் தாக்கத்தை சந்தத்தொடரால் உண்டாக்க முடிந்தது எனபது மட்டுமல்ல இந்தியாவில் ஒரு பெரும் அரசியல் சக்தியாக திராவிட இயக்கத்தை கட்டி எழுப்பமுடிந்தது ! பேச்சு திறமையை மட்டுமே மூலதனமாக கொண்டு பலரை ; அரசியல் தொழிலால் பணக்காரர்களாக்கிய பெருமை இந்த சந்ததத்திற்குண்டு !

அப்பேர்பட்ட வல்லமையான கர்மப்பதிவுகள் பிறவித்தொடரில் அடுக்கடுக்காக ஆத்துமாவில் பெருகுகின்றன ! பாவம் முற்றும்போதோ அதன் விளைவுகள் இப்பிறவியில் வாட்டி வதக்கி சஞ்சலத்தை உண்டாக்குகின்றன 1 அதனால் என்ன செய்தேனோ என்ன செய்தேனோ என முக்கிக்கொண்டும் முனகிக்கொண்டும் துக்கசாகரத்தில் பலர் திரியும்படி நேரிடுகிறது ! கெட்டகாலே கெடும் பட்டகுடியே படும் என பல குடும்பங்கள் இறங்குமுகத்திலேயே தவிக்கின்றன !

கந்தனென் றென்றுற் ...... றுனைநாளும்
     கண்டுகொண் டன்புற் ...... றிடுவேனோ


அவ்வாறு தவிக்கிறவர்களை கண்கொண்டுபாராமல் பதிலுக்குபதில் வாட்டிவதக்குபவராக மட்டுமே கடவுள் இருப்பதில்லை ! அவர் நீதிபரர் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு அவர் கிருபையுள்ளவர் என்பதும் உண்மை !

எரேமியா என்றொரு யூத பக்தர் - கடவுளை நெருங்கியவர் -- இஸ்ரவேல் நாட்டவர்கள் துன்மார்க்கமாய் நடந்த போது கடவுளின் தண்டனை வரப்போகிறது என கடவுளின் வாயாக இருந்து எச்சரித்தவர் ! அப்படி எச்சரித்ததால் ஜனங்களால் கடும் துண்பத்திற்கு ஆளானவர் ! நெபுகாத்னேசர் என்பவர் பாபிலோனிய பேரரசனாக மாறி இஸ்ரவேலை கைப்பற்றி அதனை அழித்து ஜனங்களை அடிமைகளாக கொண்டுபோகப்போகிறான் ; மனம் திரும்பிவிடுங்கள் என்று மன்றாடிய அவரை `` நீ என்ன தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் `` என்று இஸ்ரவேல் ராஜாவால் பாதாளசிறையிலிடப்பட்டவர் ! ஆனால் அவர் எச்சரித்தது போல இஸ்ரவேலை பாபிலோன் படைகள் கைப்பற்றி தீக்கிரையாக்கிற்று ! அழிவு வந்தபிறகும் எரேமியா கடவுளீடம் புலம்பிய பாடல்கள் யூத வேத நூலான தவ்ராத்தில் `` புலம்பல் `` என்றொரு புத்தகமாக உள்ளது ! அதிலிருந்து சிலபகுதிகளை கவணியுங்கள் !

புலம்பல் : 3 அதிகாரம்

    1. கடவுளுடைய சினத்தின் மிலாற்றினால் உண்டான சிறுமையைக் கண்டபுருஷன் நான்.

    2. அவர் என்னை வெளிச்சத்திலே அல்ல, இருளிலே அழைத்து நடத்திவந்தார்.

    3. அவர் தமது கையை எனக்கு விரோதமாகவே நித்தமும் திருப்பினார்.

    4. என் சதையையும் என் தோலையும் முற்றலாக்கினார்; என் எலும்புகளை நொறுக்கினார்.

    5. அவர் எனக்கு விரோதமாகக் கொத்தளங்கட்டி, கசப்பினாலும் வருத்தத்தினாலும் என்னை வளைந்துகொண்டார்.

    6. பூர்வகாலத்தில் செத்துக்கிடக்கிறவர்களைப்போல என்னை இருளான இடங்களில் கிடக்கப்பண்ணினார்.

    7. நான் புறப்படக் கூடாதபடி என்னைச் சூழவேலியடைத்தார்; என் விலங்கைப் பாரமாக்கினார்.

    8. நான் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், என் ஜெபத்துக்கு வழியை அடைத்துப்போட்டார்.

    9. வெட்டின கற்களின் சுவரால் என் வழிகளை அடைத்துப்போட்டார், என் பாதைகளைத் தாறுமாறாக்கினார்.

    10. அவர் எனக்குப் பதிவிருக்கிற கரடியும், மறைவிடங்களில் தங்குகிற சிங்கமுமாயிருக்கிறார்.

    11. என் வழிகளை அப்புறப்படுத்தி, என்னைத் துண்டித்துப்போட்டார்; என்னைப் பாழாக்கிவிட்டார்.

    12. தமது வில்லை நாணேற்றி, என்னை அம்புக்கு இலக்காக வைத்தார்.

    13. தம்முடைய அம்பறாத்தூணியின் அம்புகளை என் உள்ளிந்திரியங்களில் படப்பண்ணினார்.

    14. நான் என் ஜனத்தார் யாவருக்கும் பரியாசமும், நித்தம் அவர்கள் கின்னரப் பாடலுமானேன்.

    15. கசப்பினால் என்னை நிரப்பி, எட்டியினால் என்னை வெறிக்கச்செய்தார்.

    16. அவர் பருக்கைக் கற்களால் என் பற்களை நொறுக்கி, என்னைச் சாம்பலில் புரளப்பண்ணினார்.

    17. என் ஆத்துமாவைச் சமாதானத்துக்குத் தூரமாக்கினார்; சுகத்தை மறந்தேன்.

    18. என் பெலனும் நான் கடவுளுக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்துபோயிற்று என்றேன்.

ஆனால் கடவுளின் கிருபையை உணர்ந்த அவர் இஸ்ரவேல் ரட்சிக்கப்படும் என்ற தனது நம்பிக்கையை அடுத்து வெளிப்படுத்துகிறார் !

21. இதை என் மனதிலே வைத்து, நம்பிக்கைகொண்டிருப்பேன்.

22. நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கடவுளுடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.

23. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.

24. கடவுள் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கைகொண்டிருப்பேன்.

25. தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கடவுள் நல்லவர்.

26. கடவுளுடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது.

27. தன் இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது.

28. அவரே அதைத் தன்மேல் வைத்தாரென்று அவன் தனித்திருந்து மௌனமாயிருக்கக்கடவன்.

29. நம்பிக்கைக்கு இடமுண்டோ என்று தன் வாயைத் தூளில் நுழுந்துவானாக.

30. தன்னை அடிக்கிறவனுக்குத் தன் கன்னத்தைக் காட்டி, நிந்தையால் நிறைந்திருப்பானாக.

31. கடவுள் என்றென்றைக்கும் கைவிடமாட்டார்.

32. அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார்.

33. அவர் மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்துகிறதில்லை.

34. ஒருவன் பூமியில் சிறைப்பட்டவர்கள் யாவரையும் தன் கால்களின்கீழ் நசுக்குகிறதையும்,

35. உன்னதமானவரின் சமுகத்தில் மனுஷருடைய நியாயத்தைப் புரட்டுகிறதையும்,

36. மனுஷனை அவனுடைய வழக்கிலே மாறுபாடாக்குகிறதையும், கடவுள் காணாதிருப்பாரோ?

37. கடவுள் கட்டளையிடாதிருக்கக் காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்?

38. உன்னதமானவருடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ?

39. உயிருள்ள மனுஷன் முறையிடுவானேன்? அவன் தன் பாவத்துக்கு வரும் தண்டனையைக்குறித்து முறையிடுகிறதென்ன?

40. நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கடவுளிடத்தில் திரும்பக்கடவோம்.

41. நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுக்கக்கடவோம்.

42. நாங்கள் துரோகஞ்செய்து, கலகம் பண்ணினோம்; ஆகையால் தேவரீர் மன்னியாதிருந்தீர்.

43. தேவரீர் கோபத்தால் மூடிக்கொண்டு, எங்களைத் தப்பவிடாமல் பின் தொடர்ந்து கொன்றீர்.

44. ஜெபம் உட்பிரவேசிக்கக் கூடாதபடிக்கு உம்மை மேகத்தால் மூடிக்கொண்டீர்.

45. ஜனங்களுக்குள்ளே எங்களைக் குப்பையும் அருவருப்புமாக்கினீர்.

46. எங்கள் பகைஞர் எல்லாரும் எங்களுக்கு விரோதமாய்த் தங்கள் வாயைத் திறந்தார்கள்.

47. திகிலும் படுகுழியும் பாழ்க்கடிப்பும் சங்காரமும் எங்களுக்கு நேரிட்டது.

தேசியப்பேரழிவு என சொல்லத்தக்கதாக இஸ்ரவேல் தேசம் பாபிலோனிய பேரரசால் தீக்கிறையாக்கபட்டது ! ஆனாலும் கடவுளை நெருங்கிய ஒரேஒரு அடியவர் புலம்பியதற்காக அந்த நாட்டிற்கு விடுதலையை கடவுள் அவருக்கு தீர்க்கதரிசனமாக வெளிப்படுத்தினார் ! வாக்களித்ததுபோலவே செய்தும் கொடுத்தார் !

``பணமில்லாமல் விற்கப்பட்டீர்கள் ; விலையில்லாமல் திரும்ப கொண்டுவரப்படுவீர்கள் `` கோரேஷ் என்றொரு ராஜாவை எழுப்புவேன் ! அவன் உங்களை விடுதலயாக்கி அணுப்பிவிடுவான் என 5 தலைமுறைக்கு பிந்தய ராஜாவைப்பற்றி தீர்க்கதரிசனம் இறங்கிற்று !

26. நான் என் ஊழியக்காரரின் வார்த்தையை நிலைப்படுத்தி, என் ஸ்தானாபதிகளின் ஆலோசனையை நிறைவேற்றி: குடியேறுவாய் என்று எருசலேமுக்கும், கட்டப்படுவீர்கள் என்று யூதாவின் பட்டணங்களுக்கும் சொல்லி, அவைகளின் பாழான ஸ்தலங்களை எடுப்பிப்பவர்.
28. கோரேசைக் குறித்து: அவன் என் மேய்ப்பன்; அவன் எருசலேமை நோக்கி: நீ கட்டப்படு என்றும்; தேவாலயத்தை நோக்கி: நீ அஸ்திபாரப்படு என்றும் சொல்லி, எனக்குப் பிரியமானதையெல்லாம் நிறைவேற்றுவான் என்று சொல்லுகிறவர் நான். (ஏசாயா :44 அதிகாரம்)


துக்கமும்துயரமும் சஞ்சலமும் நிறைந்தோர் கிணற்றுக்குள் விழுந்தவர்கள் போல ! குய்யோமுறையோ என கூக்குரலிடுவார்கள் அல்லது பக்தி செய்வார்களே தவிற அதிலிருந்து மீண்டெழுகிற வழியை அவர்களாக சிந்திக்க இயலாது ! அவர்களை ரட்சிக்கிற -- மீட்கிற ஒருவர் இருக்கிற இடத்திலிருந்து ஒரு படி மேலே இழுத்துவிட வேண்டும் ! அந்தப்பணியே ``கந்து`` எனப்படுவது !

வட்டிக்கும் கந்து வட்டிக்கும் என்ன வித்தியாசம் உள்ளது ?

துக்கமும்துயரமும் சஞ்சலமும் நிறைந்தோர் கிணற்றுக்குள் விழுந்தவர்கள் குய்யோமுறையோ என கூக்குரலிடுவார்கள் அல்லது பக்தி செய்வார்களே தவிற அதிலிருந்து மீண்டெழுகிற வழியை அவர்களாக சிந்திக்க இயலாது !

அவர்களை ரட்சிக்கிற -- மீட்கிற ஒருவர் இருக்கிற இடத்திலிருந்து ஒரு படி மேலே இழுத்துவிட வேண்டும் ! அந்தப்பணியே ``கந்து`` எனப்படுவது !

வட்டிக்கும் கந்து வட்டிக்கும் என்ன வித்தியாசம் உள்ளது ?

ஒரு பெரிய தொகையை ஏதாவது அடைமாணத்தின் பேரில் கொடுத்துவிட்டு அசலை அடைக்கும்வரை மாதாமாதம் வட்டி வசூலித்துக்கொண்டிருப்பார்கள் . அது வட்டி கடன் . அசல் கழியாது

ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வட்டியும் முதலும் சேர்த்து அடைக்கும் படியாக ஒரு கணக்கில் அசலும் தீர்ந்துவிடும்  என்பது கந்து வட்டி கடன் !

ஒரு சிறு தொகையை அடைமாணமில்லாமல் கொடுத்துவிட்டு அதை தினம் தினம் அளவான சக்திக்கு உட்பட்ட தொகையாக திரும்ப பெற்றுக்கொள்ளும் உதவியாக ஏழைகளுக்கு உதவும் முறையை `` கந்து`` என்று முஸ்லீம் சமுதாயத்தில் அறிமுகம் செய்யப்பட்டது !   எதையும் கலப்படம் செய்தே பழகிய மனிதர்கள் ஈரை பேணாக்கி ஈகை என்ற நோக்கில் உருவாக்கபட்ட கந்தை கந்துவட்டி கொடுமையாக்கி விட்டனர் !

கந்து பணியை - ரட்சிக்கிற வேலையை யார் செய்ய தகுதியானவர் ? இந்த பிரபஞ்சம் யார் மூலமாக கடவுளால் படைக்கபட்டதோ ; இப்பிரபஞ்சத்தை கடவுளின் பிரதினிதியாக இருந்து ஆளுகை செய்கிற யுகபுருஷனே அதற்குரியவர் ! அவர் திரேதா யுகத்தில் ராமராகவும் ; துவாபர யுகத்தில் கிருஸ்ணராகவும் அவதரித்து அசுரர்களையும் அவர்களால் பலம் கொடுக்கபட்டவர்களையும் அழித்தார் ! கலியுகத்தில் அசுரர்களுக்கு ஆளுகை ஒப்படைக்க பட்டுள்ளது ! மனித சிந்தையை ஆளுகை செய்து அவர்களை தீமைக்குள் வழி நடத்தும் அதிகாரம் அவர்களுக்கு ஒப்புகொடுக்கபட்டுள்ளது ! ஆகையால் அவர்களால் வழிதப்பிபோபவர்களை ரட்சிக்கும்படியாக அத்ற்குரிய விலையை தாமே செலுத்த அவரே இயேசுவாகவும் அவதரித்தார் ! இஸ்ரேலிலே இயேசு அவதரிக்கும் முன் 1000 ஆண்டுகளுக்கு முன்னால் ``ஏசாயா `` என்றொரு தீர்க்கதரிசி இருந்தார் ! அவர் மூலமாக முன்னறிவிக்கபட்டதை பாருங்கள் :

3. அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்.

4. மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் கடவுளால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.

5. நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

6. நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கடவுளோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.

7. அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.

10. கடவுளோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கடவுளுக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.

11. அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்.

12. அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன் !

பின்னாளில் இயேசுவும் தனது பணியை குறிப்பிடும்போது :

(மத்தேயு 9:13) பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுகொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்.
(லூக்கா 15:7) மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.


முற்பிறவிகளின் கர்மவிணைகளாலும் ; இப்பிறவியின் முன்னோர்களின் கர்மவிணைகளாலும் ஒரு மனிதன் பீடிக்கபடும் போது யுகபுருஷன் மூலமாக கடவுளிடம் மண்ணிப்பு கோரி நல்லறிவு கொடுக்கும்படியாக வேண்டுதல் வேண்டும் ! அதுதான் சற்குருவின் குருத்துவ பணி -- கந்து , ரட்சிப்பு , மீட்பு என்பது ! இதை மதம் மாறுவது என்று சடங்காச்சாரமாக விளக்கம் கொடுத்து குழப்பத்தை உண்டாக்குகின்றனர் ! சற்குருவாகிய -- முருகனாகிய ராமராகிய கிருஸ்ணராகிய இயேசுவாகிய யுகபுருஷன் யார் மூலமாகவேனும் கடவுளை சரணடைந்து வேண்டுதல் செய்யவேண்டும் ! ரட்சிப்பு கிடைக்கும் ! வழிகாட்டுதல் உண்டாகும் ! தன்னை உணர்ந்து ஞானம் உண்டாகி தவறுகளிலிருந்து விடுபடும் பரிசுத்தம் உண்டாகும் !

குரு இல்லாத வித்தை பாழ் என்பார்கள் ! கடவுளை குருவின் மூலமாக சரணடைவதும் வேண்டுவதுமே சரியானது ! அந்த குரு -- கந்தன் யார் என்பதை கண்டுகொள்ளூகிற மெய்யறிவு வரப்பிரசாதமாகும் ! அந்த பேறு இதை வாசிப்போருக்கு உண்டாக ஏக இறைவன் அருள்புரிவாராக !

தந்தியின் கொம்பைப் ...... புணர்வோனே
     சங்கரன் பங்கிற் ...... சிவைபாலா


தந்தி என்பது நரம்புகளை கொண்டு சுரங்களை எழுப்பி ஒத்திசைந்து இசையை படைக்கும் கருவிகளை உள்ளடக்கியது !இசைந்து இசையை மெருகேற்றுபவை இவ்வகைகருவிகள் ! அவ்வாறு கடவுளோடும் அவரது யுகபுருஷனோடும் அவரது சேவல்களான உபகுருக்களோடும் இசைந்து பூமியில் பரலோக ராஜ்ஜியத்தின் வித்துக்களாக வாழும் ஆத்துமாக்களே தந்தியின் கொம்புகளாகும் ! இறைபேரரசு இவர்கள் மூலமாக பூமியில் தளங்களை அமைத்துக்கொள்ளுகிறது ! இவர்களோடு இவர்களுக்குள் கந்தன் ஆத்துமாவில் இரண்டற கலந்துள்ளார் ! அதே நேரத்தில் சரீரம் என்ற அளவில் யுகங்கள் தோரும் மனித சரீரத்திலும் ராமராக , கிருஸ்ணராக , இயேசுவாகவும் வந்துள்ளார் ! இயேசு அவரின் வாயால் தன்னை பலமுறை மனுஷகுமாரன் என்று சொல்லியிருக்கிறார் !

(மத்தேயு 20:28) அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக்கொடுக்கவும் வந்தார் என்றார்.
மத்தேயு 9:6 பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்றார்.

 
செந்திலங் கண்டிக் ...... கதிர்வேலா
     தென்பரங் குன்றிற் ...... பெருமாளே.

செந்தில் என்பது மாயைகளின் தொகுதியாகும் ! அசுரர்கள் உருவாக்கும் பலவகையான மாய்மாலங்கள் செந்திலாக மனித ஆத்துமாக்களை மூழ்கடிக்கிறது ! இந்த செந்தில்கள் பலவற்றை கொண்டு அசுரர்கள் கிரெவ்ஞ்ச மலையை அமைத்து தங்கள் ராஜ்ஜியத்தை பாதுகாக்கிறார்கள் ! அதை தமது ஞானவேலால் முருகன் சிதறடித்தார் என்பது சரியை தத்துவம் ! திருச்செந்தூரில் கடற்கரையில் லேசான பொக்கு பாறையால் ஒரு சிறுமலை இருக்கும் ! அதுதான் செந்தில் எனப்படுவது ! அதற்குள் உள்ள ஒடுகலான குகையில் வள்ளி கோவிலிருக்கும் ! மகாமாயைக்குள்ளே பக்தர்களான வள்ளிகள் எப்போதும் மாட்டிக்கொள்கிறார்கள் என்பதே அதன் வெளிபாடாகும் ! ஆனாலும் செந்திலை கண்டிக்கும் ஞானமாகிய வேலின் கதிர்கள் கந்தனிடமிருந்து வள்ளிகளை கடைத்தேற்றுகிறது !

ஞானம் , அருள் , பரலோகம் என்பது வடக்காக குறிக்கபடுவதைப்போல மனிதர்கள் , பூமி தெற்காக குறிக்கபடுகிறது ! அந்த பூமியில் பரலோகராஜ்ஜியத்தின் வித்துக்களாய் மாறியவர்கள் மேல்னோக்கி உயர்ந்த குன்றுகளாகும் ! அந்த ஆத்துமாக்களுடன் அவர்களுக்கு தலைவராய் - சற்குருவாய் யுகபுருஷன் உள்ளார் ! அதுவே குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பதாகும் !

கந்தனை அறிந்து கொள்வதற்கும் சற்குருவாய் ஏற்றுகொள்ளவும் ஆத்துமாகளுக்கு -- மனிதர்களுக்கு மதம் ஒரு தடையாய் இல்லை ! சற்குருவின் ஒரு அவதாரத்தை பின்பற்றுவதாக சொல்லிகொள்ளூம் மனிதர்கள் தங்களின் பக்தியை புழகாங்கிதப்படுத்தி மற்ற மார்க்கங்களை அவரின் அடுத்த அவதாரத்தை குறைத்துபேசும் மனித அஞ்ஞானத்தை வெளிகாட்டுகின்றனர் ! ஞானத்தின் மீது அஞ்ஞானத்தை புணைந்து மதபேதம் என்ற இருளுக்குள் விழுந்துள்ளனர் ! கடவுள் தமது பேரருளால் ஞானத்தை நம் மீது பிரகாசிக்க செய்வாராக ! 


  (திருக்குர்ஆன் 4:150.) நிச்சயமாக கடவுளையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், கடவுளுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, "நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது நம்பிக்கை கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்" என்று கூறுகின்றனர்; (நிராகரிப்புக்கும் நம்பிக்கைக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.
4:152. யார் கடவுளின் மீதும் அவன் தூதர்கள் மீதும் நம்பிக்கை கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை கடவுள் அவர்களுக்குக் கொடுப்பான்; கடவுள் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.