இந்தப்பிலேயரிலும் கேட்கலாம்
https://ia801505.us.archive.org/17/items/08Track8_20160731/08%20Track%208.ogg
பத்தியால் யானுனைப் ...... பலகாலும்
பற்றியே மாதிருப் ...... புகழ்பாடி
முத்தனா மாறெனைப் ...... பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற் ...... கருள்வாயே
உத்தமா தானசற் ...... குணர்நேயா
ஒப்பிலா மாமணிக் ...... கிரிவாசா
வித்தகா ஞானசத் ...... திநிபாதா
வெற்றிவே லாயுதப் ...... பெருமாளே.
பத்தியால் யானுனைப் ...... பலகாலும்
பற்றியே மாதிருப் ...... புகழ்பாடி
உன் மீதுள்ள பக்தியால் பல காலமாக உன்னை விடாது பற்றிக்கொண்டு மகத்தான திருப்புகழை பாடுகிறேன் !
முத்தனா மாறெனைப் ...... பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற் ...... கருள்வாயே
நித்திய ஜீவன் உள்ள பெருவாழ்வு பெற்று கடவுளுடன் சேர்வதற்கு வழியை அருள்வாயே
உத்தமா தானசற் ...... குணர்நேயா
ஒப்பிலா மாமணிக் ...... கிரிவாசா
உத்தமனே ! இரக்கமும் நற்குணமும் உள்ளோரை நேசிக்கிறவனே ! ஒப்பில்லாதா மாமணியே ! உயர்ந்த பரலோகத்தில் வாசமாயிருக்கிறவனே !
வித்தகா ஞானசத் ...... திநிபாதா
வெற்றிவே லாயுதப் ...... பெருமாளே.
ஆற்றல் நிறைந்தவனே ! ஞானம் நிறைந்த பாதையை காட்டவல்லவனே ! அசுரர்களை வெல்லும் ஞான வேலை உடைய பெரியவனே ! குருவாக கடவுளால் அனுப்பபடுகிற இறைதூதனே!!