Total Pageviews

Monday, March 3, 2014

திருப்புகழ் 581


https://ia601505.us.archive.org/21/items/09Track9_201607/09%20Track%209.ogg

மாலாசை கோப மோயாதெ நாளு
     மாயா விகார ...... வழியேசெல்

மாபாவி காளி தானேனு நாத
     மாதா பிதாவு ...... மினிநீயே


ஆசை . கோபம் முதலான மாயைகள் மனிதனை ஓயாமல் வாட்டுவதால் பாவம் செய்கிற துர்க்குணம் உள்ளவனாக நான் இருந்தாலும் குருவே -- மாதாவும் பிதாவும் நீயே என உன்னை சரனடைகிறேன் ! .

நாலான வேத நூலாக மாதி
     நானோதி னேனு ...... மிலைவீணே

நாள்போய் விடாம லாறாறு மீதில்
     ஞானோப தேச ...... மருள்வாயே

நான்கு வேதங்கள் ஆகமங்கள் ஆதி நூல்களை நான் ஓதியதில்லை ; அப்படியே ஓதினாலும் ஞானம் உண்டாகாமல் வீனே நாள் போகிகிறது ! அப்படி வீனாகாமல் 36 தத்துவங்களையும் உள்வாங்கிய ஞானத்தை எனக்குள் விளைய வைப்பாயாக !

பாலா கலார ஆமோத லேப
     பாடீர வாக ...... அணிமீதே

பாதாள பூமி யாதார மீன
     பானீய மேலை ...... வயலூரா


இறைவனின் தூதனே ! சேற்றில் ஒட்டாத தாமரை போல ப்ற்றற்று உலகம் உடைமைகள் மீதும் அதுபோல பாதாளம் ; பூமி உள்ளடக்கிய இந்த பிரபஞ்சம் உற்பத்தி செய்யப்பட்ட போது அதற்கு ஆதாரமாக இருந்த ஆதி கங்கை என்ற ஜலத்தின் மீதும் சூழ்ந்து தேவ ஆவியாய் அசைவாடிக்கொண்டிருப்பவனே !

வேலா விராலி வாழ்வே சமூக
     வேதாள பூத ...... பதிசேயே

வீரா கடோர சூராரி யேசெ
     வேளே சுரேசர் ...... பெருமாளே.


ஞானத்தை உடையவனே ! பலவாய் விரவி ; பரவி அவைகளில் கலந்து இருப்பவனே ! ஜடங்கள் ; உயிரிணங்கள் அனைத்திற்கும் அதிபதியானவனே !  வீரனே ! கொடிய அசுரர்களை வெல்பவனே ! ஞானம் விளைந்த பக்தர்களை வழினடத்தும் இறைவனின் தூதனாகிய யுகபுருசனே !