Total Pageviews

Tuesday, April 18, 2017

திருப்புகழ் 170




நாத விந்துக லாதீ நமோநம
வேத மந்த்ரசொ ரூபா நமோநம
ஞான பண்டிதசாமீ நமோநம ...... வெகுகோடி

நாம சம்புகு மாரா நமோநம
போக அந்தரி பாலா நமோநம
நாக பந்தம யூரா நமோநம ...... பரசூரர்

சேத தண்டவி நோதா நமோநம
கீத கிண்கிணி பாதா நமோநம
தீர சம்ப்ரம வீரா நமோநம ...... கிரிராஜ

தீப மங்கள ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய்

ஈத லும்பல கோலா லபூஜையும்
ஓத லுங்குண ஆசா ரநீதியும்
ஈர முங்குரு சீர்பா தசேவையு ...... மறவாத

ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
சோழ மண்டல மீதே மநோகர
ராஜ கெம்பிர நாடா ளுநாயக ...... வயலூரா

ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ...... லையிலேகி

ஆதி யந்தவு லாவா சுபாடிய
சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.
 
திருப்புகழ் 17௦ ஆடியோ Click & Hear


நாத விந்துக லாதீ நமோநம
வேத மந்த்ரசொ ரூபா நமோநம
ஞான பண்டிதசாமீ நமோநம

நாதமும் விந்தும் கலப்பதால் உண்டாகும் சரீரத்தில் பூமியில் பிறப்பவன் மனிதன்
நாதமும் விந்தும் கலக்காமல் முருகன் மனிதனைப்போல பூமியில் பிறப்பவன் என்கிறது திருப்புகழ்
 
ஆண்பெண் சேர்க்கையினால் கருத்தரித்த பிண்டத்தில் நின்று பிறப்பவன் முருகன் அல்ல
 
தீதம் என்றால் கலக்கப்பட்டது கலவை
அதீதம் என்றால் கலவை அற்ற நிலை
ஆண்பெண் கலக்காமல் பிறந்த மனிதன் வேதமந்திர சொருபமாக பூமியில் இருப்பான்
 
சிவன் நாதவிந்து சேர்க்கையினால் வந்தவரல்ல

ராமர் கிரிஷ்ணர் இயேசு மூவரும் ஆண்பெண் சேர்க்கையில்லாமல் பெண்ணின் கர்ப்பபையை மட்டும் பயன்படுத்தி பிறந்த நாராயண அவதாரங்களாகும்

இந்த நால்வரும் வேதங்களை அருளியதும் அல்லாமல் வேதமாகவே அவர்களது வாழ்க்கை இருந்தது
 
வேத மந்திர சொருபங்களாகவே அவர்கள் பூமியில் இருந்தார்கள்
 
தம்மை அண்டியோர்க்கு ஞானத்தை வாரிவழங்கியும் வருகின்றனர்
 
பண்டிதன் என்றால் ஆசிரியன் குரு என்பதாம்
 
இந்நால்வரும் ஞான குருவாக கடவுளின் சார்பாக நமக்கு உபாத்யாயம் செய்பவர்கள்
ஞான பண்டிதசாமீ நமோநம
ஞான பண்டிதசாமீ நமோநம

சற்குரு என்ற பதம் கடவுளுக்கு அடுத்தவரை குறிக்கிறது
 
ஆண்பெண் கலப்பில் பிறந்த யாரும் குருவாகலாம்
 
ஆனால் சற்குரு என அழைக்க அவர்களுக்கு தகுதியில்லை
 
ஆண்பெண் கலக்காமல் பிறந்தவரே சற்குரு

வெகுகோடி
நாம சம்பு குமாரா நமோநம
போக அந்தரி பாலா நமோநம
நாக பந்த மயூரா நமோநம

சிவனுக்கு கொஞ்சநஞ்ச பெயர்களா இருக்கின்றன
 
உலகம் முழுதும் மனித குலங்களின் குலதெய்வ வழிபாடுகளில் பாதிக்கு மேல் சிவனை குறிப்பதாகும்
 
காரணம் ஆதிமனிதரான சிவன் பூமியில் ஆங்காங்கு சிலவருடங்கள் தங்கி ஆங்காங்கு மனித குலத்தை தோற்றுவித்தார்
 
சம்பு என்றால் தனக்குள்ளாக தேக்கி வைத்து வெளியே விடும் இருப்பு ஆகும் சம்ப் என்று ஆங்கிலத்தில் சொல்கிறோமல்லவா
 
பரலோகத்தில் கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட முதல் மனிதனான சிவன் அர்த்தநாரியாக இருந்தார் 

அவருக்குள்ளிருந்தே பாதி ஆள் பார்வதி வெளிபடுத்தப்பட்டாள்

பூமிக்கு அனுப்பப்பட்ட அவ்விருவரும் மனித குலத்தை பூமி முழுதும் பலுகி பெருக்கினர்
 
ஆதியாகமம் 1:28 பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.
மனித சமுதாயத்தை தனக்குள்ளிருந்து வெளிப்படுத்தியதால் சிவன் சம்பு வெகுகோடி நாமம் உள்ளவர்
 
பூமியில் மனிதனாக வருகிற யாரும் சிவகுமாரர்களே
 
நாராயணனே பூமிக்கு அவதாரமாக வந்தாலும் அவரும் சிவக்குமாரே
 
சிவனிடம் பார்வதி நமக்கு பின்பு நம் பிள்ளைகளை யார் நல்வழிப்படுத்துவார் என கேட்டபோது சிவன் உபதேசித்தருளியது குருகீதை
 
குருகீதையின் முக்கியமான சரத்து
பரலோகத்தில் நாராயணனாக இருப்பவர் அவ்வப்போது பூமிக்கு சிவக்குமாரனாக வருவார்
 
நாராயணன் சிவக்குமாரனாக மாறி வருவதால் அவர் முருகன்
 
அவ்வாறு பூமிக்கு வரும் முருகர்களை மனிதர்கள் குருவாக ஏற்றுக்கொண்டு நல்வழிப்பட்டால் உய்வடைவார்கள் என்பதாகும்
 
அவ்வாறு பூமிக்கு வந்த முருகர்கள் ராமர் கிரிஷ்ணர் இயேசு ஆகும்
 
நாம சம்பு குமாரா நமோநம

கோசலை மைந்தா
கைகேயி புத்ரா
யசோதை பாலா
தேவகி மைந்தா
மேரி மைந்தா
என அன்னையர்களின் பேராலேயே அவர்கள் அழைக்கப்பட்டனர் அவ்வளவு அன்பை அன்னையர்கள் மீது அவர்கள் காட்டினர்
 
போக அந்தரி பாலா நமோநம

மயூரம் என்றால் அழகான ஒய்யாரமான மயில் அவன் மகிழ்ச்சியை ஒய்யாரத்தை தன்னை அண்டியோர்க்கு வாரிவாரி வழங்குபவன்
 
மயில்வாகனன் என்றால் சற்குருவான முருகன் தன் சீடர்களின் மூலமாக பூமிக்கு ஞானத்தை மகிழ்ச்சியை வழங்குகிறவன் என்பதாம்
 
அவனிடம் ஞானம் பயில்வோர் பூமியில் உலகியல் விசத்தை அடக்குகிறவர்களாக இருந்து சமநிலைப்படுத்துவர்
முருகனின் வாகனமான மயில் காலில் நாகத்தை அடக்கி வைத்திருப்பதுபோல ஞானம் உலகியல் விசத்தை அடக்கும்
 
நாக பந்த மயூரா நமோநம

பரசூரர்
சேத தண்ட. வி நோதா நமோநம
கீத கிண்கிணி பாதா நமோநம
தீர சம்ப்ரம வீரா நமோநம

அசுரர்களே சகல பிரச்சினைகளுக்கும் பின்னணி
 
ஆவிமண்டல பின்னணியில்லாமல் பூமியில் சிக்கல்கள் கெடுதல்கள் நடப்பதில்லை

நாம் அந்தாள் சரியில்லை இவர் கெடுதல் பன்றார் என மனிதர்களையே குறைசொல்லிக்கொண்டிருப்போம்

வியாதிக்கு இது கூடிப்போச்சு அது குறை என டாக்டர் ஆராய்ச்சி செய்துகொண்டிருப்பார்

இவைகளுக்கு பின்னணியில் ஆவிமண்டலத்தை சரி செய்தால் ஒழிய மூர்க்கமான பிரச்சினைகள் தீராது

நோய்க்கும் பாரு
பேய்க்கும் பாரு
ஏன்பது பழமொழி

உடனே மந்திரவாதியை போய் பார்க்கலாகாது

ஏவல் பில்லிசூனியம் அவனே வைப்பான் அவனே ஏடுத்துக் விடுவான்
அது நல்லவழியல்ல

நல்லவழியில் இறைவனை பிடிப்பது
நமக்கு தெரிந்த தேவசக்திகளை குருவாக வைத்து இறைவனை பிடித்துபாருங்கள்

உடனே யார் கடவுள் நான் கடவுளா அவர் கடவுளா என அசுர சக்திகள் குழப்பத்தை கொண்டுவரும்

யாரெல்லாம் கடவுள் என்பதாக உங்களுக்கு தெரிந்திருக்கிறதோ அவர்கள் மூலமாக கடவுளே உம்மை வணங்குகிறேன் என சொல்லிப்பாருங்கள்

வெற்றி மேல் வெற்றி

ஒருவர் கடவுள் ஏன்று வைத்துக்கொள்வோம் கடவுள் மூலமாக கடவுளை வணங்கினால் என்ன குற்றம் வரும்

அதே நேரத்தில் கடவுளைவிட குறைந்த ஒரு சக்தியை கடவுளே என வழிபட்டால் உன் பிரார்த்தனை தோல்வியில் முடிகிறது

ஆகவே உனக்கு தெரிந்தவரையே வழிபடாமல் அவராக வெளிப்பட்ட இறைவா என வணங்கும் முறைதான் ஆதி இந்து நெறியாகும்

மூலமந்திரங்களை பாருங்கள்

ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ சிவாய

ஆய ஆய என ஏன் முடிகிறது

சிவனாக ஆனவனை நாராயணனாக ஆனவனை வழிபடுகிறேன்
 
தண்டம் ஆண்டியின் கையிலிருப்பது
சகலத்தையும் நான் நீ அது ஏன்ற பேதத்தை கடந்த முழுசரணாகதி மனநிலையே ஆண்டி

அந்த ஆண்டி முருகனின் தண்டம் பரத்திலுள்ள அசுரர்களுக்கு சேதத்தை உண்டாக்கும் மர்மம் ஏதனால்

சற்குரு முருகன் சகல மதமாச்சரியங்கள் உருவங்கள் பெயர்கள் ஏல்லாவற்றையும் துறந்தவராக இறைவனை சரணாகதி அடைந்துவிட்டார்

ஞானம் அவருக்கு ஊற்றெடுக்கிறது
கள்ளம் கபடம் நன்மை தீமை கடந்த பாலகனின் உள்ளமாக விளங்கினார்
 
இருமைகளை கடறாமல் இறைவனின் முழுமையை தரிசிக்கமுடியாது

ஏதாவது ஒரு மாயையில் அசுரர்கள் உங்களை கவிழ்த்து சுத்தவிட்டுவிடுவார்கள்

தீரத்தோடு அசுரர்களுடன் மல்லுக்கும் நிற்பவன் முருகன் ஏனென்றால் அவன் ஏந்த பற்றுகளையும் வேறுபாடுகளையும் கடந்த சமத்துவமானவன்

யார் இறைவனால் பூமிக்கு அனுப்பப்பட்டார்களோ அந்த சற்குருநாதர்களெல்லாம் மதமாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டே இருந்தார்கள்

கிரிராஜ
தீப மங்கள ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய்
ஈத லும்பல கோலா லபூஜையும்
ஓத லுங்குண ஆசா ரநீதியும்
ஈர முங்குரு சீர்பா தசேவையு ...... மறவாத
ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
சோழ மண்டல மீதே மநோகர
ராஜ கெம்பிர நாடா ளுநாயக ...... வயலூரா
ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ...... லையிலேகி
ஆதி யந்தவு லாவா சுபாடிய
சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள்
 
குன்றுகள் அடர்ந்த காடுகள் மத்தியில் இருந்தால் கூட பளிச்சென உயர்வாக அடையாளமாக இருப்பவை

5:14 நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.

7:24 ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.

7:25 பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.

யார் ஆன்மீக வாழ்வில் வளர்ந்து சற்குரு நாதர்கள் அல்லது இறைமனிதர்களின் வழிகாட்டுதல் படியாக வாழ்கிறார்களோ அவர்களது உலக வாழ்வு இறைபேரரசால் குன்றின் மேல் கட்டப்பட்டவர்களாக பாதுகாக்கப்படுவார்கள்
 
அவர்களெல்லாம் முருகனைப்போல கிரிராஜர்களே
 
இந்த கிரிராஜர்களே இறைநபர்களே உலகிற்கு வெளிச்சம் கொடுக்கும் கார்த்திகை தீபங்களாக ஆங்காங்கே இருப்பார்கள்
 
தேவர்களின் வழிநடுத்துதல் இவர்களுக்கு எப்போதும் இருக்கும் தூய அம்பலமான ஏக அருவ இறைவனோடு உறவாடுகிரவர்களாக இருப்பார்கள்
 
இறை அடியவர்களின் வாழ்வில் மற்ற மனிதர்களுக்கு அருளை ஈதல் வழிகாட்டல் ; அதில் மற்ற மனிதர்களால் மதிக்கப்படும் கோலால பூஜை நற்குண ஆசார நீதி போன்ற கீர்த்திகள் உண்டாகும்
 
நெற்கதிர்களால் செழித்த வயலுரின் தலைவர்களாக இறைமனிதர்கள் இருப்பார்கள்
 
அன்பின் மிகுதியால் கரூர் அரசரை சிவன் கயிலாயத்திற்கு அழைத்தபோது வெள்ளைக்குதிரையின் மீதேறி கயிலாயம் சென்றார்
 
அப்போது அடைக்கப்பட்ட வாசலை திறக்க ஆசு கவி பாடியவுடன் வாசல் திறக்கப்பட்டது
 
இதுவே இறைமனிதர்க்கு இறைவனால் உண்டாகும் மகிமையாகும்
 
அத்தகைய நாட்டில் உள்ள திருஆவினன் குடியில் வாழும் இறை மனிதர்களின் பெருமாள் ஆனவர் சற்குரு முருகனாவார்


நாராயணன் நாமத்தினாலும் ஆதிசேஷனனின் நாமத்தினாலும் நாராயணியின் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுள் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் தமது பேரருளால் நிரப்ப வேண்டுகிறேன்

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி