அது ஒரு பூட்ஸ் போல
ஓடினால் அவிழாதபடி தண்டையுடன் கோர்த்து கட்டப்பட்டிருக்க வேண்டும்
தண்டையணி வெண்டையம் கிங்கிணிசதங்கை என்கிறார் அருணகிரியார்
குழந்தைகளுக்கு தாய்மார்கள் எப்போதும் பூட்ஸ் போட்டு அழகுபார்ப்பார்கள் அதில் ஊதா இருக்கும்
அந்த சத்தத்தை கேட்டு குழந்தை அங்கும் இங்கும் ஓடும்
தங்கள் தங்கள் அலுவலைப்பார்த்துக்கொண்டே தாயும் தகப்பனும் குழந்தை என்ன செய்துகொண்டிருக்கிறது என்பதை கண்காநித்துக்கொண்டே இருப்பார்கள்
வித்தியாசம் என்றால் உடனே வந்துவிடுவார்கள்
சிவனும் கெளமாரி யும் எப்போதும் தண்டையுடன் கூடிய வெண்டயத்தை கிங்கிணிசதங்கை கோர்த்துக்கட்டி முருகனுக்கு மாட்டி அழகுபார்த்துள்ளார்கள்
அதற்கு மேலே அழகிய சிலம்பும் வேறு
அதிதேவர்கள் வீட்டு பிள்ளையல்லவா
இந்தப்பிள்ளை அசகாய மாய சூரர்களுடன் அல்லவா மல்லுக்கு வந்தது
திருச்செந்தூர் வந்து இப்பாடலை அருணகிரியார் பாடுகிறார்
சின்னஞ்சிறு பிள்ளை சண்டைக்கு வந்துவிட்டதே
அப்பனும் அன்னையும் சும்மாவா இருந்தார்கள் என்றால் அவர்கள் கண்கானித்துக்கொண்டுதான் இருந்தார்கள் என்பதற்குத்தான் இந்த பூட்ஸ் கதை
அப்புறம் சொல்கிறார்
உன் தந்தையினை வலம் வந்து சகலத்திலும் அவருடன் சந்தோசமாக கூடியிருப்பவன் நீ
அதுபோல கடம்பமாலை ; மணிமகுடம் ;தாமரை மலர் போன்ற சிவந்த கைகள் ; வேலும் கொடியும் ; பன்னிரு கண்ணும் ஆறு முகமும் ; ஆறுவகை சந்திர நிறங்களும்
( சந்திரனின் நிறங்கள்…
1. பெளர்ணமி அன்று - மஞ்சள் (Yellow)
2. அமாவாசைக்கு ஒரிரு நாள் முன்பு = வெளிர் நீலம் (Blue moon)
3. மாலையில் - வெள்ளை (White)
4. காலையில் - சாம்பல் (Grey)
5. குளிர் காலத்தில் - காவி (Orange)
6. அபூர்வமாக, கிரகண காலங்களில் - சிவப்பு (Red) )
என் கண்கள் குளிரும்படியாக என் முன் தோன்றாவோ
சூரணை அடக்க நீ போர்க்களத்தில் எழுந்தருளிய போது, பிரம்மன் படைப்பு தொழில் செய்யும் இவ்வுலகமும், பிற அண்டங்களும் மகிழ்ச்சியால் பொங்கி எழுந்தன . உன் அடிகள் வைத்த அடவுகளை கண்டு திருமாலும், சிவனும் மகிழ்ச்சி கொண்டனர்
அதுபோல நான் மகிழும்படியாக செந்தூரில் நடன பாதங்களை காண்பித்தவனே, கந்தனே, குற மங்கையின் அழகிய மணத்தை நுகர்பவனே, அகத்தியர் வணங்கும் தலைவரே,